தேசிய இரத்த வங்கி விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

நாட்டின் தற்போதைய நெருக்கடி மிக்க சூழ்நிலையின் காரணமாக குருதிக் கொடையாளர்களை தானமளிக்க முன்வருமாறு தேசிய இரத்த வங்கி கோரிக்கை விடுத்துள்ளது.


இதுகுறித்து தேசிய இரத்த வங்கி விடுத்துள்ள அறிவித்தலில்,

நாட்டில் வேகமாகப் பரவிவரும் கொரோனா வைரஸ் காரணமாக, தேசிய இரத்த வங்கியின் குருதி இருப்பில் வீழ்ச்சியேற்பட்டு வருகிறது.

குருதி என்பது வேறு எவ்வித மாற்றீடையும் கொண்டிராத அதேவேளை, மிகவும் அத்தியாவசியமானதாகவும் காணப்படுகின்றது.

எனவே தற்போது உயிர்களைக் காப்பதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியமாகிறது.

நாட்டின் தற்போதைய நிலையைக் கருத்திற்கொண்டு ஒரேநேரத்தில் பெரும் எண்ணிக்கையானோர் இரத்ததானம் செய்வதற்கு ஒன்றுகூடுவதைத் தவிர்க்க வேண்டிய தேவையேற்பட்டுள்ளது.

எனவே இரத்ததானம் வழங்க விரும்புபவர்கள் நாரஹென்பிட்டியில் உள்ள தேசிய இரத்த வங்கிக்கு 011 5332153, 011 5332154 என்ற இலக்கங்களின் மூலம் தொடர்பினை ஏற்படுத்தி முன்பதிவு செய்துகொள்ளுமாறும் கூறியுள்ளது.

அதேபோன்று நீங்கள் கடந்த ஒருமாத காலத்திற்குள்ளாக காய்ச்சல், இருமல், சுவாசக்கோளாறு ஆகியவற்றினால் பாதிக்கப்பட்டிருப்பின் அல்லது கடந்த ஒரு மாதகாலத்திற்குள்ளாக வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்கள் உங்களது வீட்டில் தங்கியிருப்பின் அல்லது அவர்களுடன் நீங்கள் நெருக்கமான தொடர்புகளைப் பேணியிருப்பின் தற்போது உங்களது வீட்டில் காய்ச்சல், இருமல், சுவாசக்கோளாறு போன்றவற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் இருப்பின், நீங்கள் கடந்த மூன்று மாதகாலப்பகுதிக்குள் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டிருப்பின் இரத்தம் வழங்குவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.