மட்டக்களப்பில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின் அலைமோதிய மக்கள்!!

நாடு முழுவதும் ஊரடங்கு அமுலில் இருந்த நிலையில் இன்று காலை 6 மணிக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்ட பின்னர் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்ய சதோச, மற்றும் ஏனைய வர்த்தக நிலையங்களை நோக்கி பெருமளவான மக்கள் விரைந்தனர்.


அநேகமான இடங்களில் மக்கள் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை பின்பற்றி நடவடிக்கைகளை மேற்கொண்ட அதேவேளை, பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டு கொரோனா தொடர்பில் மக்களை தெளிவூட்டலை வழங்கினர்.

அத்துடன் எரிபொருள் நிரப்பு நிலையங்கள்,வங்கிகளுக்கு முன்னால் நீண்ட வரிசையில் மக்கள் காத்துக் கொண்டிரு.

இதனையடுத்து , ஒவ்வொரு இடங்களிலும் பொலிஸார் குவிக்கப்பட்டு நாட்டில் ஏற்பட்ட கொரோனாவை தடுக்க முற்காப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தை கட்டுப்படுத்தும் முகமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்டமானது மீண்டும் இன்று மதியம் 2 மணி முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.