மீனவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!

நாட்டில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் நேரத்திலும் நாடளாவிய ரீதியில் உள்ள கடற்றொழிலாளர்கள் தொழிலில் ஈடுபட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


கடற்றொழில்சார் அடையாளத்தை உறுதிப்படுத்துபவர்கள் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள வேளையிலும் தொழில்சார் போக்குவரத்தில் ஈடுபட அனுமதிக்கப்பட்டுவர் என கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டு வருகின்ற ஊரடங்குச் சட்டம் காரணமாக ஆழ்கடலில் இருந்து பிடித்துவரப்படுகின்ற கடலுணவுகளை இறக்குவதற்கும் அவற்றை ஏனைய இடங்களுக்கு எடுத்துச் செல்வதற்கும் முடியாத நிலை காணப்படுகின்ற நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும், ஆழ்கடலில் இருந்து கொண்டுவரப்படும் மீன்களை அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்த்தும் செயற்பாடுகளை தினசரி காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணி வரை (ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்தாலும்) மேற்கொள்வதற்கு அனுமதிக்கப்படடுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.