யாழில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படாது

யாழ் மாவட்டத்தில் நாளை ஊரடங்கு தளர்த்தப்படாது என ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது.


கொரோனா வைரஸ் தாக்கத்தின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டே குறித்த பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு மறுஅறிவிப்பு வரும்வரை தொடரும் என ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்தல் விடுத்துள்ளது.

வட மாகாணத்தில் வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு 27ஆம் திகதியான நாளை காலை 6 மணிக்கு நீக்கப்படவிருந்தது.

எனினும் தற்போது கொரோனா வைரஸ் தொற்றும் நிலைமையை கருத்தில் கொண்டு யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு மாத்திரம் மீள் அறிவிப்பு வரை ஊரடங்கு உத்தரவினை நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஏனைய மாவட்டங்களில் ஏற்கனவே அறிவித்தமைக்கு அமைய ஊரடங்கு உத்தரவு நடைமுறை பின்பற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.