மஸ்கெலியாவில் மதுபானப் போத்தல்களுடன் இருவர் கைது!

மதுபான விற்பனை நிலையங்களைத் திறப்பதற்கு அரசாங்கம் தற்காலிகமாக தடை விதித்துள்ள நிலையில், சட்ட விரோதமான முறையில் மதுபானங்களை எடுத்துச் சென்ற இருவர் மஸ்கெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


மஸ்பெலியா பகுதியில் 52 மதுபானப் போத்தல்களை முச்சக்கரவண்டியில் எடுத்துச்சென்ற போதே குறித்த இருவரும் இன்று (வியாழக்கிழமை) கைதாகியுள்ளனர்.

பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நீக்கப்படும் காலப் பகுதியில் மது விற்பனை நிலையங்களைத் திறப்பதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது. எனினும், மஸ்கெலியாவிலுள்ள தோட்டப் பகுதியொன்றில் விற்பனைக்காக எடுத்துச் செல்லப்பட்ட வேளையிலேயே இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.

மஸ்கெலியா பொலிஸாரின் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில், சந்தேசகநபர்களை ஹற்றன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸால் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.