10 மாத குழந்தைக்கு கொரோனா வைரஸ் - கர்நாடகாவில் சம்பவம்!!

பொதுவாக கொரோனா வைரஸ் வயதானவர்களை தாக்கி வருவதாக மருத்துவர்கள் கூறி வருகின்றனர். வயதானவர்களுக்கு சர்க்கரை நோய், இரத்த அழுத்த நோய் ஆகியவை இருக்கும் என்பதால் அவர்களை வெகு வேகமாக கொரோனா வைரஸ் தொற்றி விடும் என்று கூறப்படுகின்றது.


இந்த நிலையில் இந்தியாவில் முதல் முறையாக 10 மாத குழந்தைக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலத்திலுள்ள பந்த்வால் என்ற தாலுகாவில் உள்ள 10 மாத குழந்தைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அந்த குழந்தையின் பெற்றோர் உள்பட உறவினர்கள் அனைவரும் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். 10 மாத குழந்தைக்கு கொரோனா வைரஸை பரப்பியது யாராக இருக்கும் என்பது குறித்த விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்தியாவில் இன்று ஒரே நாளில் 75 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் இந்தியாவில் மொத்தம் 750 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா வைரசால் இந்தியாவில் இதுவரை 21 பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.