ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்படுகின்றதா!!

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள மார்ச் ஊரடங்கு சட்டம் 30 ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டு மறு அறிவித்தல் வரையிலும் அமுலில் இருக்குமென அரசாங்கம் அறிவித்துள்ளது.


இந்நிலையில், இந்த ஊரடங்கு சட்டம், ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி வரையிலும் நீடிப்பதற்கு அரசாங்கம் ஆலோசித்து வருவதாக அறியமுடிகின்றது.

இதுதொடர்பில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில், கடந்தவாரம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது, ஆராயப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், ஏப்ரல் 6 ஆம் திகதி வரை நீடிப்பதற்கு கலந்தாலோசிக்கப்பட்டு வருகிறது.

அதன் பின்னர், 7 மற்றும் 8 ஆம் திகதிகளை தவிர்த்து, ஏப்ரல் 15 ஆம் திகதி வரையிலும் விடுமுறை என்பதனால், அரசாங்கம் இவ்வாறு ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.