யாழில் பிராந்திய ரீதியில் ஊரடங்கு தளர்த்தும் யோசனை முன்வைப்பு!!

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களைப் போன்று யாழ்ப்பாணத்திலும் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.


இந்தநிலையில் யாழ்ப்பாணத்தில் ஒவ்வொரு பிராந்தியத்திலும் வெவ்வேறு நேரங்களில் ஊரடங்கை நீக்குவது தொடர்பில் ஆலோசனை மாவட்ட செயலகத்தால் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

யாழ்ப்பாணத்தில் இன்று காலை 6 மணிக்கு ஊரடங்குச் சட்டம் நீக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டபோதும், அது மறு அறிவித்தல் வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணக் குடாநாட்டின் ஒவ்வொரு பிரதேசங்களிலும் ஒவ்வொரு நேரம் ஊரடங்கை தளர்த்துவதன் ஊடாக மக்கள் கூட்டம் கூடுவதைத் தடுக்க முடியும்.

எனவே,குடாநாட்டில் ஒவ்வொரு இடத்திலும் ஊரடங்கை வெவ்வேறு நேரங்களில் தளர்த்துவது தொடர்பான பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளதென தெரிவிக்கப்படுகின்றது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.