இங்கிலாந்து விமானநிலையம் பிணவறையாக மாறுகிறது!

கொரோனா வைரஸ் பரவுவது இங்கிலாந்தில் அதிகரித்து வருவதாக இங்கிலாந்து அரசாங்கம் உத்தியோகப்பூர்வமாக தெரிவித்துள்ளது.


சீனாவின் வுஹான் நகரத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ்,பிற நாடுகளுக்கும் பரவி பெரும் துயரத்தை அளித்து வருகிறது.

இத்தாலி, ஈரான், ஸ்பெயின், அமெரிக்காவை தொடர்ந்து, இங்கிலாந்தையும் கொரோனா அதிர வைக்கிறது. இங்கிலாந்து இளவரசர் சார்ள்ஸ், பிரதமர் போரிஸ் ஜோன்சன், சுகாதார அமைச்சர் உள்பட யாரையும் விட்டுவைக்காமல் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு மிகவும் மோசமான சூழலை அடைந்துள்ளதால், பேர்மிங்ஹாம் விமான நிலையத்தை, 12 ஆயிரம் உடல்களை வைக்கும் தற்காலிக பிணவறையாகப் பயன்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அந்தவகையில் ஒரு களஞ்சியசாலை மற்றும் இரு முனையங்களை கொண்ட இந்த விமான நிலையத்தில், 1ம் கட்டமாக 1,500 உடல்களை வைக்கும் அளவிற்கான பிணவறையாக மாற்றப்படவுள்ளது.

கொரோனா பாதிக்கப்பட்டோர் மட்டுமில்லாமல் , வேறு எந்த நோயால் இறப்பவரையும் வைப்பதற்கான தற்காலிகமான பிணவறை உருவாக்கப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸின் பாதிப்பினால் இங்கிலாந்தில் இதுவரை 759 பேர் உயிரிழந்துள்ள நிலையில் கடந்த புதன்கிழமை 475 ஆக இருந்த இந்த எண்ணிக்கை திடீரென உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.