கொரியப் பிரஜைகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு!

புத்தளம், தங்கொட்டுவ நகரில் சுற்றித் திரிந்த நிலையில் சுகாதாரத் தரப்பினரால் தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட கொரிய நாட்டுப் பிரஜைகள் பத்துப்பேர் தமது தனிமைப்படுத்தல் முடிந்து வெளியேறியதாக தங்கொட்டுவ சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்ததுள்ளது.


குறித்த கொரிய நாட்டவர்கள் பத்துப் பேரும் கடந்த 8 ஆம் திகதி தங்கொட்டுவ நகரில் தங்கியிருந்தபோது பிரதேச மக்கள் வழங்கிய தகவலையடுத்து பொலிஸார் மற்றும் சுகாதாரத் தரப்பினர் ஆகியோரின் தலையீட்டில் அவர்கள் தங்கொட்டுவ நகரில் தங்குமிடம் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இந்தக் கொரிய நாட்டவர்கள் கொழும்பு பிரதேசம் ஒன்றில் தொழில் புரிந்து வருவதாகவும், இந்நிலையில் தங்கொட்டுவ நகருக்கு வருகை தந்திருந்த நிலையில் இவ்வாறு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் தமது தனிமைப்படுத்தல் காலத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து விடுவிக்கப்பட்டுள்ளதோடு அவர்களுக்கான வைத்திய சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளதாக அந்நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.