மூடப்பட்டகொழும்பின் புறநகர் மீண்டும் திறப்பு!

கொரோனா அச்சுறுத்தலை அடுத்து இன்று பகல் மூடப்பட்ட கொழும்பு புறநகர் பகுதியான ஜயவர்தனபுற கோட்டே, ஒபேசேகரபுற அருணோதய மாவத்தை மீண்டும் இன்று மாலை திறக்கப்பட்டுள்ளது.


அந்த பகுதியை சேர்ந்த இருவர் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சுவிஸ் போதகரின் ஆராதனையில் கலந்து கொண்டதன் பின்னர் சுகயீனம் அடைந்தனர்.

இதனையடுத்து அவர்களுக்கு கொரோனா வைரஸ் இருக்கலாம் என்ற அச்சம் காரணமாக அப்பகுதி இன்று பகல் முற்றாக மூடப்பட்டது.

எனினும் இருவரும் குறித்த சூரியவெவ பிரதேசத்தில் நடைபெற்ற ஆராதனையில் கலந்து கொண்டிருந்ததாகவும், எனினும் அவர்களுக்கு தொற்று இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டதை அடுத்து குறித்த பகுதி மீண்டும் இன்று மாலை திறக்கப்பட்டுள்ளது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.