கர்ப்பிணி பெண்ணொருவர் மட்டக்களப்பில் உயிரிழப்பு!!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள சின்ன ஊறணி பகுதியில் கர்ப்பிணி பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


குறித்த பெண்ணின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

சின்ன ஊறணி , பாடசாலை வீதியைச் சோந்த 25 வயதுடைய துவேந்திரன் துசாந்தினி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கணவன் -மனைவிக்கிடைய குடும்பத்தகராறு இடம் பெற்று நிலையில் நேற்று இரவு வீட்டின் அறையிலுள்ள கூரையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இந்நிலையில் குறித்த இடத்திற்கு பொலிஸ் தடவியல் பிரிவினர் வரவழைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்ற நிலையில் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.