6 மாவட்டங்களில் புதனன்று ஊரடங்கு தற்காலிக தளர்வு!!

யாழ்ப்பாணம், கொழும்பு, புத்தளம், கண்டி, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய 6 மாவட்டங்களிலும் நாளைமறுதினம் புதன்கிழமை காலை 6 மணிக்குத் தளர்த்தப்படும் ஊரடங்குச் சட்டம் அன்று பிற்பகல் ஒரு மணிக்கு மீள நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.



கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழப்பாண மாவட்டத்தில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் மறு அறிவிப்பு வரை நீடிக்கும் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

ஏனைய பகுதிகளுக்கு இன்று பிற்பகல் 2 மணிக்கு மீளவும் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி காலை 6 மணி வரை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவையை தவிர்த்து வேறு நடவடிக்கைகளுக்கு மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.