கொரோனவால் பிரான்சில் மரணமானவரின் தந்தை சுவிட்சர்லாந்தில் மரணம்!!

கொரானா வைரஸ் உலகளாவிய ரீதியில் வேகமாக பரவி குறுகிய காலப்பகுதிக்குள்ளேயே இன்று வரை தினம் தினம் மக்கள் உயிரிழந்து வரும் நிலையில், சுவிட்சர்லாந்தில் புங்குடுதீவைச் சேர்ந்த 59 வயது நிரம்பிய திரு. சதாசிவம் லோகநாதன் என்பவர் நான்கு தினங்களுக்கு முன்னர் உயிரிழந்திருந்தார்.


அதேபோல் பிரான்சில் கொரோனாவினால் அண்மையில் பலியான யாழ். தாவடி கொக்குவில் வேம்படி முருகமூர்த்தி கோயிலடியைச் சேர்ந்த கீர்த்தி எனும் திரு. குணரட்ணம் கீர்த்திகனின் தந்தையார் திரு. குணரட்ணம் அவர்களும் இன்றையதினம் சுவிஸ் நாட்டில் மரணமடைந்துள்ளதாக அவருடைய உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் என்ன காரணத்தால் இறந்தார் என்பது தொடர்பான முழுமையான அறிக்கையை வைத்தியசாலை வெளியிட வில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

கீர்த்திகன் இறப்பதற்கு சில வாரங்களுக்கு முன்னரே சுவிஸ் நாட்டிலுள்ள லங்கேந்தால் எனுமிடத்தில் உள்ள சகோதரி வீட்டுக்குச் சென்று தந்தையைப் பார்த்து வந்ததுடன் அங்கு நடைபெற்ற குடும்ப நிகழ்விலும் கலந்து கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை சுவிஸில் உள்ள சகோதரிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ளதாகவும் தெரிய வருகிறது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.