பெருங்காயம் - சில மருத்துவப் பயன்கள்

பெருங்காயத்தில் அப்படி என்ன பலன் இருக்கு? வாசனையை தவிர என்ன இருக்கிறது என்று கேட்பவர்கள் பலர் உண்டு. சாம்பாரில் வாசத்துக்காக மட்டும் பெருங்காயம் சேர்ப்பவர்கள் அதிகம் பேர். ஆனால், பெருங்காயம் வாசத்துக்காக மட்டும் சேர்க்கப்படுவது இல்லை. பல்வேறு மருத்துவ பயன்களை கொண்டிருக்கிறது என தெரிவிக்கிறார்கள் சித்த மருத்துவர்கள்.


குழந்தை பிரசவித்த தாய்மார்களுக்கு அங்காயப் பொடி கொடுப்பது பண்டைய வழக்கம். வயிற்றில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றி சுத்தமாக்கக்கூடியது அங்காயப் பொடி. சுண்டைக்காய் வற்றலும், பால் பெருங்காயமும் முக்கிய மூலப்பொருட்களாக அங்காயப் பொடியில் பயன்படுத்தப்படுகிறது.

குழந்தைகளுக்கு செரிமானக் கோளாறால் வயிற்றுவலி ஏற்பட்டாலும், வாயுப்பிடித்து வயிறு முறுக்கி அழும் குழந்தைக்கு, ஒரு சிட்டிகை பெருங்காயத்தை மோரில் கலந்து கொடுத்தால் சரியாகி விடும்.

மாதவிலக்கு சரியாக வராமலும், மாதவிலக்கின்போது ஏற்படும் வயிற்றுவலியால் அவதிப்படும் பெண்களும் பெருங்காயத்தை சிறிதளவு தண்ணீரிலோ, மோரிலோ கலந்து குடித்தால் நல்ல பலன் தரும்.

சளி தீராதவர்களுக்கு மிளகு, சீரகத்துடன் சரியான அளவு பெருங்காயம் சேர்த்து ரசம் வைத்து குடிக்கலாம். பெரியவர்களுக்கு ஏற்படும் வயிற்றுவலி, வாயுப்பிடிப்புக்கு சிறிதளவு பெருங்காயத்தை வாழைப்பழத்தில் வைத்து சாப்பிட்டால் வலி குறையும். தினந்தோறும் உணவில் கடுகு, மஞ்சள் பொடி, பெருங்காயம் இந்த மூன்றையும் சிறிதளவு சேர்த்து வருவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

பெருங்காயத்துக்கு உடலில் உள்ள கொழுப்புகளை கரைக்கும் திறனும் உண்டு. மலச்சிக்கலை சரியாக்கும். நிணநீர் நாளங்களில் வரும் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் பெருங்காயத்துக்கு உண்டு என சில ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.