6ம் நாளாக தொடரும் ஈருருளிப்பயணத்திற்கு பன்னாட்டு ஊடகங்கள் முக்கியத்துவம்

வரும் வழியில் நேற்றைய தினம் (28.02.2020) அரசியற் சந்திப்புக்களையும் La meuse Liège, La Meuse Luxembourg ஊடகச் சந்திப்புக்களையும் மேற்கொண்டு . இன்றைய தினம் (29.02.2020) Germany நாட்டின் எல்லையினை வந்தடைந்தது, தொடந்து Remich ஊடாக Saarbrücken மாநகரசபை அரசியற் சந்திப்பினை நோக்கி விரைகின்றது. எவ்விடர் வரினும் தொடர்ந்தும் திட்டமிட்டபடி France நாட்டினை ஊடறுத்து Swiss , Geneva மாநகரில் அமைந்துள்ள ஐ.நா முன்றலில் (ஈகைப்பேரொளி முருகதாசன் திடலினை) வந்தடையும் என்பது திண்ணம்.
போராட்ட வடிவங்கள் மாறலாம் ஆனால் நாம் கொண்ட இலட்சியத்தின் நோக்கம் மாறாது.
-தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன்.
நன்றி,
தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்.