தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு
அயர்லாந்தில் இருந்து சென்னை வந்த பயணிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.
உலகம் முழுவதும் வேகமான பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இந்தியாவில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், நாடு முழுவதும் 168 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டுவருகின்றனர். தமிழகத்திலும் கொரோனா வைரஸ் பரவத்தொடங்கியுள்ளது. நேற்றுவரை தமிழகத்தில் இரண்டு பேருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் பரவியிருந்தது உறுதி செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், விமானம் மூலம் கடந்த 17-ம் தேதி சென்னை வந்த 21 வயது நிரம்பிய அயர்லாந்து நாட்டை சேர்ந்த மாணவருக்கு கொரோனா வைரஸ் பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
அயர்லாந்தில் இருந்து சென்னை வந்த அந்த மாணவருக்கு கொரோனா அறிகுறி இருந்ததால் விமான நிலையத்தில் இருந்து நேரடியாக அவர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
பரிசோதனையின் முடிவில் மாணவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார். இதனால், தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.
உலகம் முழுவதும் வேகமான பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இந்தியாவில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், நாடு முழுவதும் 168 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டுவருகின்றனர். தமிழகத்திலும் கொரோனா வைரஸ் பரவத்தொடங்கியுள்ளது. நேற்றுவரை தமிழகத்தில் இரண்டு பேருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் பரவியிருந்தது உறுதி செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், விமானம் மூலம் கடந்த 17-ம் தேதி சென்னை வந்த 21 வயது நிரம்பிய அயர்லாந்து நாட்டை சேர்ந்த மாணவருக்கு கொரோனா வைரஸ் பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
அயர்லாந்தில் இருந்து சென்னை வந்த அந்த மாணவருக்கு கொரோனா அறிகுறி இருந்ததால் விமான நிலையத்தில் இருந்து நேரடியாக அவர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
பரிசோதனையின் முடிவில் மாணவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார். இதனால், தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.