6 வார பச்சிளம் குழந்தை கொரோனாவினால் உயிரிழப்பு!
அமெரிக்காவில் பிறந்து 6 வாரங்களேயான பச்சிளம் குழந்தை ஒன்று கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்துள்ளது.அமெரிக்காவின் கனெக்டிகட் மாநிலத்தில், கடந்த வாரம் உடல்நிலை குறைபாட்டால் ஆறு வார சிசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது.
அக்குழந்தைக்கு நடத்தப்பட்ட சோதனையில், செவ்வாயன்று கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் புதனன்று சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளது.இச்செய்தியை டுவிட்டரில் பகிர்ந்துள்ள, அம்மாநில கவர்னர் நெட் லாமண்ட், 'இந்த வைரஸ், எங்களை மிகவும் கருணை இல்லாமல் தாக்குகிறது. கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள இளம் வயது உயிரிழப்பு இதுவாகும். இந்த மனதை உருக்கும் சம்பவம், மக்கள் வீட்டிலேயே இருப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. உங்கள் வாழ்க்கையும் மற்றவர்களின் வாழ்க்கையும் அதைச் சார்ந்தது. இந்த கடினமான நேரத்தில் குழந்தையின் குடும்பத்தினருக்காக பிராத்திகிறோம்.' என கூறியுள்ளார்.கொரோனா வைரஸ் காரணமாக பச்சிளம் குழந்தை உயிரிழந்த சம்பவம் உலக மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில், 2 லட்சத்துக்கும் மேற்பட்டோரை கொரொனா வைரஸ் தாக்கியுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் அதிகபட்சமாக 884 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் மொத்த உயிரிழப்பு 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நியூயார்க் நகரம் கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்நகரில் மட்டும் ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். மருத்துவ உபகரணங்களுக்கும் தட்டுபாடு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
அக்குழந்தைக்கு நடத்தப்பட்ட சோதனையில், செவ்வாயன்று கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் புதனன்று சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளது.இச்செய்தியை டுவிட்டரில் பகிர்ந்துள்ள, அம்மாநில கவர்னர் நெட் லாமண்ட், 'இந்த வைரஸ், எங்களை மிகவும் கருணை இல்லாமல் தாக்குகிறது. கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள இளம் வயது உயிரிழப்பு இதுவாகும். இந்த மனதை உருக்கும் சம்பவம், மக்கள் வீட்டிலேயே இருப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. உங்கள் வாழ்க்கையும் மற்றவர்களின் வாழ்க்கையும் அதைச் சார்ந்தது. இந்த கடினமான நேரத்தில் குழந்தையின் குடும்பத்தினருக்காக பிராத்திகிறோம்.' என கூறியுள்ளார்.கொரோனா வைரஸ் காரணமாக பச்சிளம் குழந்தை உயிரிழந்த சம்பவம் உலக மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில், 2 லட்சத்துக்கும் மேற்பட்டோரை கொரொனா வைரஸ் தாக்கியுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் அதிகபட்சமாக 884 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் மொத்த உயிரிழப்பு 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நியூயார்க் நகரம் கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்நகரில் மட்டும் ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். மருத்துவ உபகரணங்களுக்கும் தட்டுபாடு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo