கொரோன, கோவிட் என பெயர் சூட்டிய பெற்றோர்!!

கொரோனா பரவாமல் தடுக்க, இந்தியா முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட நேரத்தில் பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு, கொவிட், கொரோனா என பெயரிடப்பட்டது.

இந்தியாவின் சத்தீஸ்கரில் ராய்பூரில் மார்ச், 27ல் பிரீத்தி வர்மா(27) என்பவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன. இதில், ஆண் குழந்தைக்கு 'கோவிட்' எனவும், பெண் குழந்தைக்கு 'கொரோனா' எனவும் பெயரிடப்பட்டது.
இதுகுறித்து குழந்தைகளின் பெற்றோர் கூறும்போது, 'உயிருக்கு ஆபத்தான வைரசாக இருந்தாலும், மக்களிடையே சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை, கொரோனா ஏற்படுத்தியுள்ளது. 'எனவே, அதனை நினைவில் கொள்ளும் வகையில், இதுபோல் பெயரிட்டுள்ளோம்' என்றனர். ஒருவேளை, மனமாற்றம் ஏற்பட்டால் எதிர்காலத்தில் பெயர் மாற்றத்துக்கும் வாய்ப்பு இருப்பதாக அவர்கள் கூறினர்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.