ஏப்ரல் 1 - ஆசிரியை மறியலில்!!
ஏப்ரல் முதலாம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டுவிட்டதாக முகப்புத்தகத்தில் பதிவுசெய்த நடன ஆசிரியை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபயவுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும், அப்போது அவருக்கு வைரஸ் உறுதிசெய்யப்பட்டதாகவும் குறித்த ஆசிரியை பதிவிட்டிருந்ததாக கூறப்படுகின்றது.
இதனையடுத்து அவர் இரகசிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அவர் நேற்றையதினம் அவர் கொழும்பு மேலதிக மாஜிஸ்திரேட் நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டபோது அவரை விளக்கமரியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)




