வவுனியாவில் குளத்தில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு!

வவுனியா, மயிலங்குளம் குளத்தில் மூழ்கி ஒருவர் இன்று (புதன்கிழமை) மதியம் உயிரிழந்துள்ளார்.

மயிலங்குளம் குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற நகுலேஸ் என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையான 43 வயதுடையவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
ஆசியகுளம் பகுதியைச் சேர்ந்தவரான இவர், மீன்பிடிப்பதற்குச் சென்றவேளை குளத்தில் மூழ்கிய நிலையில் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டுள்ளனர்.
இதையடுத்து, 1990 அவசர நோயாளர் காவு வண்டியூடாக வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பிய போதிலும் அவர் ஏற்கனவே இறந்துள்ளமை தெரியவந்துள்ளது. இதுகுறித்த விசாரணையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.