விரைவில் மீண்டுவர பிரார்த்திக்கின்றேன் – ஜனாதிபதி!!
பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் விரைவில் மீண்டுவர பிரார்த்திப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இது குறித்து டுவிட்டரில் பதிவில் கருத்து தெரிவித்துள்ள ஜனாதிபதி, “பொரிஸ் ஜோன்சன் விரைவாக குணமடைய எனது வாழ்த்துக்கள். இந்த நெருக்கடியான காலத்திலும் உங்களுக்கும் பிரித்தானிய மக்களுக்குமான எங்கள் பிரார்த்தனை தொடரும்” என பதிவிட்டுள்ளார்.
பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சனுக்கும் கொரோனா வைரஸ் பரவியிருந்தது கடந்த மாதம் உறுதி செய்யப்பட்டதை அடுத்து தன்னைத்தானே 10 நாட்களுக்கு தனிமைப்படுத்திக்கொண்டார்.
ஆனால், வைரஸ் தொற்றின் தாக்கம் குறையாததால் அவர் நேற்று (திங்கட்கிழமை) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரதமரின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாமல் தற்போது அவரது உடல் நிலை மோசமடைந்து வருகிற நிலையில் தற்போது அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)




