யாழ் கோண்டாவில் டிப்போவில் பேருந்துகளில் டீசல் மாயம்!!
யாழ்ப்பாணம் கோண்டாவில் டிப்போவில் தரித்து நின்ற இ.போ. ச. சொந்தமான ஆறு பேருந்துகளில் டீசல் திருடப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பரவலை தடுப்பதற்காக நாட்டில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்துகள் அனைத்தும் கோண்டாவில் பேருந்து நிலையத்தில் தரித்து வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் இவ்வாறு தரித்து நின்ற 6 பேருந்துகளில் டீசல் திருடப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாட்டினை கோண்டாவில் இ.போ.ச சாலையின் உயர் அதிகாரிகள் கோப்பாய் போலீஸ் நிலையத்தில் பதிவு செய்துள்ளனர்.
இந்த முறைப்பாட்டில் 6 பேருந்துகளில் டீசல் திருடப்பட்டதாகவும் பேருந்து ஒன்றில் இருந்து ஒரு தொலைக்காட்சியும் திருடப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)




