தப்பித்து சென்ற கொரோனா சந்தேக நபர் கைது!!

களுத்துறை – பேருவளை பிரதேசத்திலிருந்து தப்பித்து வாத்துவ பிரதேசத்தில் தலைமறைவாகியிருந்த இளைஞர் ஒருவரை பொலிஸார் நேற்று இரவில் கைது செய்துள்ளனர்.

குறித்த நபர் பேருவளை – ஹெட்டிமுல்ல பிரதேசத்திலிருந்து சுகாதார அதிகாரிகளின் கண்களுக்குத் தென்படாமல் வாத்துவ பகுதிக்கு சென்று தலைமறைவாக இருந்த நிலையில் தற்போது கைது செய்யப்பட்டிருக்கின்றார்.
33 வயதுடைய குறித்த நபருக்கு கொரோனா இருப்பதாக சந்தேகம் காணப்பட்டதை அடுத்து சந்தேக நபர் களுத்துறை – நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.