சாதாரண விடுதிக்கு மாற்றப்பட்டார் தாவடி நபர்!!
யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான தாவடியைச் சேர்ந்த குடும்பத்தலைவர் உடல்நிலை தேறி வருகின்றார் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “அவரது உடல்நிலையில் தொடர்பில் நேற்று(செவ்வாய்கிழமை) இரவு தொலைபேசியின் ஊடாக கொழும்பு தொற்று நோயியல் வைத்தியசாலை பணிப்பாளருடன் உரையாடியிருந்தேன்.
தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட அவர், உடல்நிலை தேறி சாதாரண விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளார். அவர் இன்னும் சில நாள்கள் அல்லது வாரத்தின் பின்னர் வீடு திரும்புவார்” என குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மார்ச் 22ஆம் திகதி தாவடியைச் சேர்ந்த குடும்பத்தலைவருக்கு கோரனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தொற்று நோயியல் வைத்தியசாலைக்கு (ஐடிஎச்) அனுப்பப்பட்டார்.
இந்த நிலையில் 15 நாள்கள் தீவிர சிகிச்சையின் பின்னர் அவரது உடல்நிலை முன்னெற்றம் கண்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)




