நிர்ணய விலையில் வடமாகாணத்திற்கு அத்தியாவசிய பொருட்கள்

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோன தொற்று நோய் காரணமாக வடமாகாணத்தில் ஏற்பட்டுள்ள பொருள்களின் அதிகூடிய விலையேற்றத்தை தடுக்க வடக்கின் 5 மாவட்டங்களுக்கும் அத்தியாவசியப் பொருள்கள் கொண்டுவரப்படவுள்ளன.

இது தொடர்பில் அந்தந்த மாவட்ட செயலர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது
இதன் பிரகாரம் 5 மாவட்டத்திற்கும்,
ஒரு லட்சத்து 55 ஆயிரம் கிலோ சீனி 117 ரூபா விலையிலும் ,
ஒரு லட்சம் கிலோ வெங்காயம் 160 ரூபா,
ஒரு லட்சத்து 50 ஆயிரம் சமன் ரின் 100 ரூபா விலையிலும்
ஒரு லட்சத்து 50 ஆயிரம் கிலோ அரிசி 98 ரூபா விலையில்
அனுமதிக்கப்பட்டு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் யாழ் மாவட்டத்திற்கு அரிசி 20 ஆயிரம் கிலோ , சீனி 50 ஆயிரம் கிலோ , பருப்பு 20 ஆயிரம் கிலோ எடுத்து வரும் அதேவேளை உள்ளூர் மீனவர்களின் நன்மை கருதி மீன்ரின் எடுத்து வரப்படவில்லை எனவும் கூறப்படுகின்றது.
அதேபோல முல்லைத்தீவு மாவட்டம் 50 ஆயிரம் மீன்ரீன் , 50 ஆயிரம் கிலோ அரிசி , 25 ஆயிரம் கிலோ சீனி , 15 ஆயிரம் கிலோ பருப்பு , பெரிய வெங்காயம் 15 ஆயிரம் கிலோ அனுமதிக்கப்பட்ட நிலையில் அரிசி தவிர்ந்த ஏனைய பொருட்கள் ஏற்றப்படுகின்றன.
அத்துடன் மன்னார் மாவட்டம் 25 ஆயிரம் கிலோ பருப்பு. , 25 ஆயிரம் மீன்ரின்.30 ஆயிரம் சீனி. 10 ஆயிரம் கிலோ வெங்காயம் அனுமதிக்கப்பட்ட நிலையில் தேவை கருதி அரிசி , மீன் ரின் தவிர்த்து சீனி , பருப்பு , வெங்காயம் ஏற்றப்படுகின்றது.
மேலும் கிளிநொச்சி மாவட்டத்திற்கும் அனுமதிக்கப்பட்ட பொருட்களில் அரிசி தவிர்ந்த ஏனைய பொருட்கள் எடுத்து வரப்படுகின்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.