தொலைபேசி நிறுவனங்கள் வழங்கவுள்ள சலுகை!!

நாட்டு மக்களுக்கு இணைய வசதிகளை முடிவுமானளவு வரையறையின்றி வழங்க நிறுவனங்களின் உயர்மட்ட அதிகாரிகள் இணக்கம் வெளியிட்டுள்ளனர்.

கொவிட் 19 செயலணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பஷில் ராஜபக்ஷவிற்கும், தொலைத்தொடர்பு நிறுவனங்களின் உயர் அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.
இந்த சந்திப்பு நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக அறிய முடிகின்றது.
இந்த சந்திப்பில் டயலொக், மொபிடெல், ஹச், ஏயார் டெல், எஸ்.எல்.டி நிறுவனங்களின் உயர்மட்ட அதிகாரிகளும், தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் பிரதிநிதிகளும் கலந்துக்கொண்டுள்ளனர்.
இதன்போது கொவிட் 19 பிரச்சினை இலங்கையில் வலுவடைந்து வருகின்ற நிலையில், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராயப்பட்டுள்ளது.
அத்துடன் கட்டணம் செலுத்தப்படாத தொலைபேசி இணைப்புகள் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி வரை துண்டிக்கப்படாது என இந்த சந்திப்பின் போது தொலைபேசி நிறுவனங்களின் உயர்மட்ட அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.