இலங்கையில் மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று!
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 935 ஆக அதிகரித்துள்ளது.
ஏற்கனவே 925 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் தற்போது மேலும் 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 449 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இதுவரை கொரோனா தொற்றால் 9 மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo