பிரான்சில்110 பேர் கடந்த 24 மணிநேரத்திற்குள் பலி!

இன்று(20) மாலை நடந்த செய்தியாளர் சந்திப்பில் சுகாதார தலைமை இயக்குநர் ஜெரோம் சாலமொன் அவர்களின் தினசரி அறிக்கை

கொரோனாவினால் கடந்த 24 மணிநேரத்திற்குள் 110 பேர் சாவடைந்துள்ளனர்.

வைத்தியசாலைகளில் 17.812 பேர்,வயோதிப இல்லங்களில் 10.320 பேர் சாவடைந்துள்ளனர் .

மொத்தமாக பிரான்சில் 28.132 பேர் சாவடைந்துள்ளனர்.


17.941 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்,1.794 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

63.356 பேர் முற்றாகக் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்ச்சியாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், அவசரகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வருகின்றது.
Blogger இயக்குவது.