விமானப் படையின் அம்புலன்ஸ் மோதியதில் பளையில் விபத்து!!
விமானப் படையின் அம்புலன்ஸ் மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், அவரது மனைவி படுகாயமடைந்துள்ளார்.
பளையில் இன்று(வியாழக்கிழமை) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆதவனின் பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.
குடும்பஸ்தரும் அவருடைய மனைவியும் மோட்டார் சைக்கிளில் பளை – தம்பகாமம் சந்தியில் ஏறிய போது, யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி ஏ9 வீதியில் பயணித்த அம்புலன்ஸ் மோதியதனாலேயே இந்த விபத்து இடம்பெற்றது.
இந்த விபத்தில் 55 வயதுடைய குடும்பஸ்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடைய மனைவி படுகாயமடைந்த நிலையில் வைத்திசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)




