கற்பிட்டியில் நால்வர் கைது!!

சட்டவிரோதமாக கடலட்டைகளை கடத்திய நால்வர் கற்பிட்டி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமான முறையில் இரண்டு படகுகள் மூலம் கடலட்டைகளை கடல் வழியாகக் கொண்டு வந்து பாலக்குடா சந்தியில் வைத்து வாகனத்தில் ஏற்றுவதற்கு முற்பட்டவேளை குறித்த நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கற்பிட்டி பொலிசாருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய இன்று காலை குறித்த சுற்றிவளைப்பு மேட்கொள்ளப்பட்டது.
இதன்போது 763 கிலோகிராம் கடலட்டைகள் கைப்பற்றப்பட்டதுடன் கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட 2 படகுகள் மற்றும் சொகுசு வான் ஒன்றும் கைப்பற்றப்பட்டது.
சந்தேக நபர்கள் கடலட்டைகளை சொகுசு வான் மூலம் கொழும்பிற்கு கடத்திச்செல்ல முற்பட்டதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ள நிலையில் கற்பிட்டி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Blogger இயக்குவது.