வீட்டின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்!!

யாழ். உடுவில் அம்பலவாணவர் வீதியில் எவரும் இல்லாத வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்தோடு அந்த வீட்டின் மீது மிளகாய்த் தூள் கரைசலும் விசிறப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த வீட்டில் எவரும் இல்லாதமையினால் இந்த சம்பவம் தொடர்பாக அயலவர்களால் சுன்னாகம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
இதனையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.