மீண்டும் அமுலுக்கு வரும் ஊரடங்கு!!
கொழும்பு மற்றும் கம்பாஹா மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு மறு அறிவித்தல்வரை வரை தொடரும் நிலையில், ஏனைய 23 மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவு நாளைமறுதினம் (மே 24) மற்றும் 25ஆம் திகதி திங்கட்கிழமை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய 23 மாவட்டங்களிலும் நாளை இரவு 8.00 மணிக்கு நடைமுறைப்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம், 26ஆம் திகதி செவ்வாய்கிழமை அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்படும் என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும் முந்தைய அறிவிப்புகளில் குறிப்பிடப்பட்ட ஊரடங்கு உத்தரவுகள் மாறாமல் உள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo