காணாமல் போன தன் பிள்ளையைத் தேடிய மற்றொரு தாயும் மரணம்!!

கிளிநொச்சியில் காணாமல் போன தன் பிள்ளையைத் தேடிக்கொண்டிருந்த தாய் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை உண்டாக்கியுள்ளது.

கிளிநொச்சி மருதநகர் பகுதியில் எவ்வித அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில், 23 வயதில் தமிழின அழிப்பு யுத்தத்தில் பிள்ளையைத் தொலைத்த சின்னையா கண்ணம்மா எனும் தாய் உயிரிழந்துள்ளார்.
77 வயதான இந்த தாய் பிள்ளையும் காணாது பத்து ஆண்டுகளாக தனது மகன் பிரசாந்த் என்பவர் இன்று வருவார், நாளை வருவார் என போராட்டங்களிலும் விசாரணைகளிலும் தேடி அலைந்த நிலையில் தனது எஞ்சிய பத்து ஆண்டுகாலத்தையும் நிம்மதியற்றே கழித்து வந்துள்ளார்.
குறித்த தாயின் கணவர் இறந்து ஒரு வருடங்கள் ஆகாத நிலையில் இவரின் மறைவு குடும்பத்தை மாத்திரமல்ல பிரதேசத்தையும் மிகுந்த சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
நிம்மதியாக உறங்குவதற்கு கூட நிரந்தர வீடு கூட அற்ற நிலையில் பிள்ளைகள் மற்றும் உறவினர்களின் சிறு உதவிகளுடன் தனக்கான வருமானத்திற்காக கோவில்களில் கச்சான் விற்று உயிரைப் பிடித்து மகனைத் தேடிய நிலையில் மகனைக் காணாதவளாகவே அந்த தாய் தன் உயிரை நீர்த்துள்ளமை காணாமல்பொனோரின் உறவுகளிடையே பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.