மகாராஷ்டிரா சிறைக் கைதிகளுக்கு பிணை!

மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் பரவலைத் கட்டுப்படுத்தும் நோக்கில் சிறைகளில் உள்ள 50 சதவீத கைதிகளுக்கு தற்காலிக பிணை வழங்க அம்மாநில அரசு தீர்மானித்துள்ளது.

மும்பை ஆர்தர் சாலை மத்திய சிறையில் உள்ள 184 கைதிகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தமை கடந்த வாரம் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மேற்படி நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நீதிபதி ஏஏ சையது, உட்துறை அமைச்சின் கூடுதல் தலைமைச் செயலாளர்  சஞ்சய் சஹாந்தே மற்றும் சிறைத் துறை இயக்குனர் ஜெனரல் எஸ்என் பாண்டே ஆகியோர் அடங்கிய உயர்நிலைக்குழு ஆலோசனை நடத்தியுள்ளது.
இதன்போதே மேற்படி தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி சிறைகளில் உள்ள 50 சதவீதமான கைதிகளுக்கு தற்காலிக பிணை மற்றும் பரோல் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் குறித்து உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி முடிவு செய்யப்படும் என உயர்நிலைக்குழு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.