கொரோனாவினால் பாதிப்பு உலகளவில் 37 இலட்சதை தாண்டியது!!
உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸால் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37 லட்சத்து 27ஆயிரத்தை கடந்துள்ளது. இந்நிலையில் சர்வதேச ரீதியாக நேற்றுவரையான காலப்பகுதியில் கொரோனா வைரஸ் பரவல் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் தொடர்பாக ஒரு பார்வை இதோ.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இதுவரையான காலப்பகுதியில் 3,7 லட்சத்து 27 ஆயிரத்து 865 பேர் உலகளாவிய ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சர்வதேச ரீதியாக மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 58 ஆயிரத்து 340ஆக அதிகரித்துள்ளது.
மேலும் குணமடைந்து வெளியேறுவோரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துவரும் நிலையில், இதுவரையான காலப்பகுதியில், 12 லட்சத்து 42 ஆயிரத்து 393 பேர் குணமடைந்துள்ளனர் என உத்தியாகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் அமேரிக்கா முதலிடத்தில் காணப்படுகிறது. அதனடிப்படையில், நேற்று வரையான காலப்பகுதியில் அமெரிக்காவில் 12 லட்சத்து 37 ஆயிரத்து 633 பேர் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை, நேற்று ஒரே நாளில் மட்டும் 24 ஆயிரத்து 798 பேர் புதிதாக தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
அதேவேளை நாளாந்தம் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளை சந்தித்து வரும் அமெரிக்காவில், தினமும் 2,350 பேர் உயிரிழந்துள்ளனர். அதனடிப்படையில் அங்கு மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 72 ஆயிரத்து 271 பேராக பதிவாகியுள்ளது.
அமெரிக்காவில் இதுவரையான காலப்பகுதியில், குணமடைந்து வெளியேறியோரின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 626 ஆக பதிவாகியுள்ளது. அதேவேளை, அமெரிக்காவில் ஏறக்குறைய ஒரு லட்சம் பேர் இறக்கலாம் எனவும் இவ்வாண்டின் இறுதிக்குள் கொரோனா வைரஸுக்கான தடுப்பு மருந்தை அமெரிக்கா கண்டுபிடிக்கும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அமெரிக்காவுக்கு அடுத்த படியாக அதிக தொற்றாளர்களை கொண்ட நாடாக, ஸ்பெயின் காணப்படும் அதேவேளை அங்கு மொத்தமாக 2 லட்சத்து 50 ஆயிரத்து 561 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை அங்கு நேற்று ஒரே நாளில் மட்டும் பாதிக்கப்படடவர்களின் எண்ணிக்கை 2,260 ஆக பதிவாகியுள்ளது. அத்துடன் அங்கு இதுவரையான காலப்பகுதியில் இறந்தவர்களின் எண்ணிக்கை 25,613 ஆக பதிவாகியுள்ள அதேவேளை நேற்று ஒரே நாளில் 185 மரணங்கள் பதிவாகியுள்ளன.
மேலும் ஸ்பெயினில் இதுவரையான காலப்பகுதியில், 1 இலட்சத்து 54 ஆயிரத்து 718 பேர் குணமடைந்துள்ளதாக உத்தியோகபூர்வ செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக அதிக உயிரிழப்புகளை எதிர்கொண்டுள்ள நாடாக பிரித்தானியா பதிவாகியுள்ள நிலையில் அங்கு இதுவரை 29 ஆயிரத்து 427 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் அங்கு நேற்று ஒரே நாளில் மாத்திரம் 693 மரணங்கள் பதிவாகியுள்ளது. பிரித்தானியாவில் இதுவரையான காலப்பகுதியில், ஒரு லட்சத்து 94 ஆயிரத்து 990 பேர் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை நேற்றைய தினம் நான்காயிரத்து 406 பேருக்கு தோற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் பரவலை சரியான முறையில் கட்டுப்படுத்த கொன்செர்வேட்டிவ் அரசாங்கம் தவறிவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டு வந்த நிலையில், பொரிஸ் தலைமையில், தற்போது கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மற்றொரு ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் குணமடைந்து வெளியேறுவோரின் எண்ணிக்கை ஆரம்பம் முதலே அதிகமாக காணப்படுகிறது. அதனடிப்படையில், இதுவரை அங்கு ஒரு லட்சத்து 67 ஆயிரத்து ஏழு பேர் தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில், ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 100 பேர் குணமடைந்துள்ளனர்.
மேலும் அங்கு நேற்று ஒரே நாளில் 855 பேர் தொற்றுக்கு இலக்காகியுள்ள நிலையில், இதுவரை 6,993 பேர் மரணமடைந்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து பிரான்சிலும் கணிசமான பாதிப்புகள் கடந்த சில வாரங்களாக ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையில் இதுவரையான காலப்பகுதியில் அங்கு ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 551 பேர் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.
அதேவேளை நேற்றைய தினம் மாத்திரம் பிரான்சில் 1,089 பேருக்கு தோற்று உருத்திப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரையான காலப்பகுதியில் பிரான்சில் 25ஆயிரத்து 531 பேர் உயிரிழந்துள்ள அதேவேளை நேற்றைய தினம் 330 பேர் மரணித்துள்ளனர்.
இதனை துருக்கியில் இதுவரை தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணக்கை ஓரி லட்சத்து 29 ஆயிரத்து 491 ஆக பதிவாகியுள்ள அதேவேளை 1,832 பேர் நேற்று ஒரே நாளில் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.
அத்துடன் நேற்றைய தினம் கொரோனா வைரஸால் உயிரிழந்த 59 பேருடன் சேர்த்து அங்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,520 அதிகரித்துள்ளது.
ஆசிய நாடுகளில் இதுவரை 587,192 தொற்றுக்க உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், நேற்றைய தினம் 14,353 பேர் தொற்றுக்குளாகியுள்ளனர்.
இதுவரையான காலப்பகுதியில் துருக்கியில் 129,491 பேரும் ஈரானில் 99,970 பேரும் இந்தியாவில் 49,400 பேரும் பாகிஸ்தானில் 22,049 பேரும் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை நேற்றைய தினம் ஆசிய நாடுகளில் இந்தியாவில் அதிகபட்சமாக 2,963 பேருக்கு தோற்று உறுதிப் படுத்தப்பட்டுள்ளதுடன், நேற்று ஒரே நாளில் அதிகபட்சமாக அங்கு 127 பேரின் மரணங்களும் பதிவாகியுள்ளது.
இதேவேளை நியூஸ்சிலாந்தில் கொரோனா வைரஸ் பரவல் ஏறக்குறைய முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன் அங்கு வர்த்தக மற்றும் போக்குவரத்து நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுவதாக அந்நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்தான் தெரிவித்துள்ளார்.
அதேவேளை மோசமான பாதிப்பினை எதிர்கொண்டிருந்த இத்தாலியிலும் படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)




