பாசிக்குடா பிரதேசத்திலும் அம்பான் சூறாவளியின் தாக்கம்!!

வங்காள விரிகுடவில் உருவான தாழமுக்கம் காரணமாக உருவான அம்பான் சூறாவளியின் தாக்கம் கிழக்கின் பாசிக்குடா பிரதேசத்திலும் இன்று அதிகாலை காணப்பட்டது.

இதன் காரணமாக பிரதேச மக்கள் அச்சமடைந்து காணப்பட்டனர்.
குளிருடன் கூடிய காற்று பலமாக வீசியதுடன் சிறு தூறலுடன் கூடிய மழை வீழ்ச்சியும் காணப்பட்டது.
அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பிரதேசங்களில் சீரற்ற கால நிலை தென்பட்டதுடன் பாசிக்குடவிலும் அதனை அண்மித்த பிரதேசங்களிலும் சூறாவளியின் தாக்கம் தென்பட்டது.
இன்று பாசிக்குடா கடல் அலையானது வழமைக்கு மாறாக உயர்ந்து காணப்பட்டதுடன் அலையின் வேகத்தின் காரணமாக அலை முடிச்சு உடைந்து கரையின் சில தூரங்களை சென்று நீர் வடிந்தோடியதை அவதானிக்க முடிந்தது.
இதன் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை என்பதுடன் மக்கள் வீதிகளில் நடமாடுவது குறைந்து காணப்பட்டது.
இதேவேளை மீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் என பொலிசார் ஒலி பெருக்கி மூலம் அறிவித்தல் விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.