அவள்.......கவிதை!!

பனிக்கால பூக்களில்
படர்கின்ற  துளிபோல
இமைக்காத புன்னகை
இதழோரம் அவளிடம்,.....


வானவில்லின் வண்ணங்களை
சேர்த்துவைத்த யெளவனம்
மேகமங்கை அவளின்
வழியோர பார்வையில்...

அவளெனும் அகராதியில்
அவள் முதல் வரிதான்,
ஒத்த முனைகளும்
ஒவ்வாத முனைகளுமாய்...

இமையோர புற்களில்
ஒட்டிக் கிடக்கிறது
சில நினைவுகளும்
பல கனவுகளும்

ஒரு தேசாந்திரியின்
பயணத்தை போல
ஒரு நதியின்
ஒட்டத்தைப்போல அவளும்.......

கோபிகை


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.