பொலிசார் ஒருவரைக் கடித்த பொதுமகன்!!

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியொன்றில் போதை பொருளை மீட்க வாய்க்குள் கைவிட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர் கை விரல்களில் கடி வாங்கியுள்ளார்.

நேற்று இரவு போதை பொருள் வியாபாரம் நடைபெறுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து அங்கு பொலிஸார் விரைந்திருந்தனர்.
அவ்வேளை அங்கிருந்த இளைஞன் ஒருவர் பொலிஸாரை கண்டதும் அங்கிருந்து ஓட்டம் பிடிக்க பொலிஸார் அவனை துரத்தி பிடித்தபோது அவன் தன் உடமையில் இருந்த போதை பொருள் பக்கெட் ஒன்றினை விழுங்குவதற்காக வாய்க்குள் போட்டுள்ளார்.
இதன் போது பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் அவனின் வாய்க்குள் கைவிட்டு போதை பொருளை மீட்க முயற்சித்துள்ளார்.
அதன் போது அவன் குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தரின் கை விரல்களை கடித்துள்ளான் இருந்த போதிலும் அவன் வாய்க்குள் போட்ட போதை பொருள் பக்கெட்டை பொலிஸார் மீட்டுள்ளனர்.
அதனை அடுத்து குறித்த இளைஞனை கொண்டு சென்ற பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.