பலாங்கொடை , நாவலப்பிட்டி நகரங்கள் நீரில் மூழ்கின!!

நாட்டில் நிலவும் மழையுடனான சீரற்ற வானிலை காரணமாக பாரிய வெள்ள அனர்த்தம் ஏற்படும் என்பதால், ஆபத்தான பகுதிகளில் வாழும் மக்களை வெளியேறுமாறு இரத்தினபுரி மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையால், களு கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசனத் துறை எச்சரித்துள்ளது.
இதன் காரணமாக, இரத்தினபுரி, எலபத்த, குருவிட்ட, கிரியெல்ல, அயஹம, பிரதேச செயலக பிரிவுகளில் உள்ள பொது மக்கள் விழிப்புடன் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இதேவேளை தொடர்மழை காரணமாக பலாங்கொடை, நாவலப்பிட்டி நகரங்கள் நீரில் மூழ்கிய புகைப்படங்கள் சில சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்பட்டுள்ளன.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.