இந்தியாவிலிருந்து 320 இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டனர்!!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாட்டிற்கு வரமுடியாமல் சென்னையில் சிக்கியிருந்த 320 இலங்கையர்கள் விசேட விமானம் மூலம் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டனர்.

அதற்கமைய ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானம் மூலம் அவர்கள் சற்று முன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
இவ்வாறு வருகை தந்த அனைவரும் கிருமித்தொற்று நீக்கப்பட்டதன் பின்னர் தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.