பம்பைமடு இராணுவ முகாமில் இருந்து 32 பேர் விடுவிப்பு!!

வவுனியா பம்பைமடு இராணுவ முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்களில் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட 32 பேர் இன்று (செவ்வாய்க்கிழமை) விடுவிக்கப்பட்டனர்.

தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கான பி.சி.ஆர். பரிதோதனைகள் முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டமைக்கான சான்றிதழ்களும் இதன்போது வழங்கிவைக்கப்பட்டது.
அனுராதபுரம், ஹொறவபொத்தான மற்றும் வவுனியாவில் கொரொனோ தொற்று இனங்காணப்பட்ட மகாகச்ச கொடியைச் சேர்ந்த கடற்படை வீரர்களின் குடும்ப உறுப்பினர்களே இதன்போது விடுவிக்கப்பட்டனர்.
வெலிசறையில் அமைந்துள்ள கடற்படை முகாமில் பணியாற்றிய 400 இற்கும் மேற்பட்ட கடற்படை உத்தியோகத்தர்களிற்கு கோரோனோ தொற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில் குறித்த முகாமில் கடமையாற்றிய கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் தனிமைப்படுத்தப்படுத்தும் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் வவுனியா பம்பைமடு இராணுவ முகாமில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் முகாமுக்கு கடந்த இருவாரங்களுக்கு முன்னர் கடற்படை உத்தியோகத்தர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் என 200பேர் பேருந்துகளின் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு தனிமைப்படுத்தும் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தனர்.
அத்தோடு வவுனியா மகாகச்சகொடியை சேர்ந்த கோரோனோ தொற்றுக்குள்ளான கடற்படை வீரரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவருடன் தொடர்புகளை பேணியவர்கள் என 9 பேரும் பம்பைமடு முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். இவர்களில் 30 பேரே இன்று முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
இதேவேளை மேலும் 160 பேர் குறித்த முகாமில் தொடர்ந்தும் தனிமைப்படுத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.