மீண்டும் விமான நிலையங்களை திறப்பது குறித்து இறுதிமுடிவு இல்லை!!

இலங்கையில் விமான நிலையங்களை மீண்டும் திறப்பது குறித்து இறுதிமுடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


சுகாதார அமைச்சின் தொற்றுநோய் ஆய்வுப் பிரிவுப் பணிப்பாளரான விசேட வைத்திய நிபுணர் டாக்டர் சுதத் சமரவீர மேற்கண்டவாறு கூறினார்.

இன்று ஊடகங்களிடம் பேசும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தொடர்ந்தும் பேசிய அவர், ”சுகாதார விதிமுறைகளுக்கு அமைய விமான நிலையங்களைத் திறக்க ஆலோசனை நடத்திவருகிறோம் என்றும் இன்னும் இறுதிமுடிவு எடுக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

மேலும் விமான நிலையங்களைத் திறந்தால் மீண்டும் கொரோனா பரவும் அச்சறுத்தல் இருப்பதால் சுகாதாரத்துறை கவனம் செலுத்தி வருகிறதாகவும் அவர் தெரிவித்தார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.