515 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் கைது!!

ஊரடங்கு சட்ட விதிமுறைகளை மீறினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கடந்த 24 மணித்தியாலங்களில் 515 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


பொலிஸ் தலைமையகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரையான 24 மணித்தியாலங்களிலேயே குறித்த அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், குறித்த காலப்பகுதியில் 152 வாகனங்களும் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி பிற்பகல் 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரையான காலப்பகுதியில் 62 ஆயிரத்து 677 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


Blogger இயக்குவது.