'ஆம்பன்’ புயல்'- மீனவர்களுக்கு எச்சரிக்கை!

தென்கிழக்கு வங்கக் கடலில் ‘ஆம்பன்’ புயல் நாளை (சனிக்கிழமை) உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எதிர்வுகூறியுள்ளது.

குறித்த இடத்தில் நீடிக்கும் ஆழ்ந்த காற்றழுத்தம்  தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் எனவும் 17 ஆம் திகதி வரை வடமேற்கு திசையிலும் அதன் பிறகு வடகிழக்குத் திசையிலும் புயல் நகர வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன்காரணமாக,  கர்நாடகா,  கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் காற்றின் ஈர்ப்பால் மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் ‘ஆம்பன்’ புயலால் வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காற்று பலமாக வீசக்கூடும் என்பதால்  மீனவர்கள் வங்கக்கடல்,  அரபிக்கடல் பகுதிகளுக்குச் செல்லவேண்டாம் என வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும் தெற்கு, மத்திய வங்க கடல், இலட்சத்தீவு,  குமரிக் கடல் பகுதிகளுக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.