தமிழின அழிப்புக் குற்றவாளி விஜய்நம்பியார் (மலையாளி)

கே: சமாதானச் செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் மற்றும் திரு.நடேசன் ஆகியோர் இராணுவத்தால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட விடயம் தொடர்பாக உங்களிடம் தகவல்கள் உண்டாமே...?


விஜய் நம்பியார்: "நடுநிசியில்  மேரி எனக்கு அழைப்பு எடுத்தார். இரண்டு பேர்.......,, நான் அந்தப் பேர்களையும் மறந்துவிட்டேன்., ஒருவர் சமாதான அலுவலகத்தைச் சேர்ந்தவர்,   அவர்கள் வெளியில் வர ஒருவழியை ஏற்படுத்திக் கொடுக்க உத்தரவாதம் ஒன்றை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் மேரி கூறினார். சரி, நான் அதனைச் செய்கின்றேன் என்று கூறினேன். அது தொடர்பில் வெளியுறவு அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர், ஜனாதிபதி ஆகியோருடன் பேசினேன். அப்போது சரணடைபவர்கள் எல்லோரும் ஒரே மாதிரியாகத்தான் நடத்தப்படுவார்கள் என்று கூறப்பட்டது...."

கே:  உங்களுக்கு உத்தவாதம் அளிக்கப்பட்டிருந்தால் ஏன் உங்களுக்கு சரணடையும் இடத்துக்குச் செல்ல அனுமதி தரப்படவில்லை? உத்தரவாதம் அளிக்கப்பட்ட பின்னரும் அவர்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள். ஏன் நீங்கள் அதுபற்றி மௌனம் காத்தீர்கள்?

விஜய் நம்பியார் : "அவர்கள் அவர்களின் ஆட்களாலேயே சுடப்பட்டிருக்கக்கூடும். எந்த விதமான ஊகங்களுக்கும் செல்ல நான் தயாரி்ல்லை...."

என முன்னுக்குப்பின் முரணான தகவல்களை Innercitypress ஊடகவிலாளரிடம் தெரிவித்து, இலங்கை அரசின் தமிழின அழிப்பிற்கு உந்துசக்தியான  ஐ.நாவின் தூதுவர் விஜய் நம்பியாருக்கு , எமது பொறுப்பாளர்கள், தளபதிகள் கொலைசெய்யப்பட்டதில் பெரும்பங்குண்டு.

#innercitypress  #Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.