திடீரென யாழில் இராணுவப் பிரசன்னம் அதிகரிப்பு!
யாழில் திடீரென இராணுவப் பிரசன்னம் அதிகமாக காணப்படுவதுடன், கெடுபிடிகளும் அதிகரித்துள்ளதாக ஆதவனின் பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.
யாழ்.நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வீதிகளில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு, வீதியில் செல்வோரின் பதிவுகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ். நகர் பகுதி, கலட்டி, நாச்சிமார் கோவிலடி, கொக்குவில், திருநெல்வேலி பாற்பண்ணை பகுதி உள்ளிட்ட பல இடங்களில் நேற்றைய தினம் புதன்கிழமை மாலை இராணுவத்தினர் குவிக்கப்பட்டு வீதியில் செல்வோரின் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டன.
அதேவேளை மோட்டார் சைக்கிள்களில் குழுக்களாகவும் இராணுவத்தினர் சுற்றுக்காவல் (ரோந்து) நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருந்தனர்.
நீண்ட காலத்தின் பின்னர் இராணுவத்தினர் வீதிகளில் குவிக்கப்பட்டு பதிவு நடவடிக்கைகளை முன்னெடுப்பது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
யாழ்.நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வீதிகளில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு, வீதியில் செல்வோரின் பதிவுகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ். நகர் பகுதி, கலட்டி, நாச்சிமார் கோவிலடி, கொக்குவில், திருநெல்வேலி பாற்பண்ணை பகுதி உள்ளிட்ட பல இடங்களில் நேற்றைய தினம் புதன்கிழமை மாலை இராணுவத்தினர் குவிக்கப்பட்டு வீதியில் செல்வோரின் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டன.
அதேவேளை மோட்டார் சைக்கிள்களில் குழுக்களாகவும் இராணுவத்தினர் சுற்றுக்காவல் (ரோந்து) நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருந்தனர்.
நீண்ட காலத்தின் பின்னர் இராணுவத்தினர் வீதிகளில் குவிக்கப்பட்டு பதிவு நடவடிக்கைகளை முன்னெடுப்பது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)




