அதிகரித்தது கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை!!
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 1045 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இன்று வியாழக்கிழமை மேலும் 17 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இவர்களில் 2 பேர் கடற்படையினர் என்றும் மற்றய 15 பேர் டுபாயில் இருந்து அண்மையில் நாடு திரும்பியவர்கள் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அவர்களில் 432 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் 112 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 20 பேர் இன்று குணமடைந்த நிலையில், குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 604 ஆக அதிகரித்துள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)




