மனித எச்சங்கள் இராணுவத் தளபதி விளக்கம்!!
கிளிநொச்சி – முகமாலைப் பகுதியில் அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகள் - எச்சங்கள் தமிழீழ விடுதலைப்புலிகளுடையவை என்று இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.
மோதலின்போது இவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்றும், இது தொடர்பில் மக்கள் குழப்பமடையத் தேவையில்லை எனவும் அவர் கூறினார்.
இதேவேளை, மனித எலும்புக்கூடுகள் - எச்சங்கள் அடையாளம் காணப்பட்ட பகுதியை கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நேரில் பார்வையிட்டுள்ளார்.
எதிர்வரும் 26ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அகழ்வுப் பணிகளை முன்னெடுக்குமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo