ஆப்கானில் மூன்று நாட்கள் போர் நிறுத்தம்!
முஸ்லிம்களின் புனித திருநாளான ரமலானை முன்னிட்டு, ஆப்கானிஸ்தான் அரசாங்கமும், தலிபான் அமைப்புமும் மூன்று நாட்கள் போர்நிறுத்தத்தை அறிவித்துள்ளது.
இதன்மூலம், சமீபத்திய வாரங்களில் அரசாங்க துருப்புக்களுக்கு எதிராக கடுமையான இஸ்லாமியக் குழு நடத்திய தாக்குதல்கள் இந்த மூன்று நாட்களும் தொடராது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜாபிஷுஹல்லா முஜாஹித் கூறுகையில், ‘எதிரிக்கு எதிராக எங்கும் தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம். எதிரி உங்களுக்கு எதிராக ஏதேனும் நடவடிக்கை எடுத்தால், உங்களை தற்காத்துக் கொள்ளுங்கள்’ என கூறினார்.
மேலும், புனித ரமலான் மாதத்தின் முடிவைக் குறிக்கும் ஈத் அல் பித்ருக்கு மட்டுமே போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
ஜனாதிபதி அஷ்ரப் கானி இந்த அறிவிப்பை வரவேற்றார். மேலும் தமது வீரர்கள் ஒப்பந்தத்தின் விதிமுறைகளை மதிப்பார்கள் எனவும் கூறினார்.
ஈத் தொழுகைக்குப் பின்னர் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற தொலைக்காட்சி உரையில், ஜனாதிபதி அஷ்ரப் கானி கூறுகையில்,
‘ஒரு பொறுப்புள்ள அரசாங்கமாக, நாமும் மற்றொரு படி முன்னேற விரும்புகிறோம். தலிபான் கைதிகளின் விடுதலை துரிதப்படுத்தப்படும். தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் நான் அறிவிக்கிறேன்’ என கூறினார்.
இதேபோன்ற போர்நிறுத்தம் கடந்த 2018ஆம் ஆண்டில் இதே ரமலான் பெருநாளில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த பெப்ரவரி மாதம் கையெழுத்திடப்பட்ட அமெரிக்க-தலிபான் அமைதி ஒப்பந்தத்தின் கீழ் கைதி பரிமாற்றம் ஒப்புக் கொள்ளப்பட்டது.
ஆனால் அமைதி பேச்சுவார்த்தைகளின் போது இது ஒரு குறிப்பிடத்தக்க தடையாக மாறியுள்ளது. இது போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஒரு படியாக இருக்க வேண்டும் என்று கருதப்பட்டது.
ஆனால், ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் விடுதலையை தாமதப்படுத்த முயற்சிப்பதாக தலிபான்கள் கூறுகின்றனர். அதே நேரத்தில் போராளிகளின் கோரிக்கைகள் நியாயமற்றவை என்று அதிகாரிகள் புகார் கூறியுள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
இதன்மூலம், சமீபத்திய வாரங்களில் அரசாங்க துருப்புக்களுக்கு எதிராக கடுமையான இஸ்லாமியக் குழு நடத்திய தாக்குதல்கள் இந்த மூன்று நாட்களும் தொடராது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜாபிஷுஹல்லா முஜாஹித் கூறுகையில், ‘எதிரிக்கு எதிராக எங்கும் தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம். எதிரி உங்களுக்கு எதிராக ஏதேனும் நடவடிக்கை எடுத்தால், உங்களை தற்காத்துக் கொள்ளுங்கள்’ என கூறினார்.
மேலும், புனித ரமலான் மாதத்தின் முடிவைக் குறிக்கும் ஈத் அல் பித்ருக்கு மட்டுமே போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
ஜனாதிபதி அஷ்ரப் கானி இந்த அறிவிப்பை வரவேற்றார். மேலும் தமது வீரர்கள் ஒப்பந்தத்தின் விதிமுறைகளை மதிப்பார்கள் எனவும் கூறினார்.
ஈத் தொழுகைக்குப் பின்னர் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற தொலைக்காட்சி உரையில், ஜனாதிபதி அஷ்ரப் கானி கூறுகையில்,
‘ஒரு பொறுப்புள்ள அரசாங்கமாக, நாமும் மற்றொரு படி முன்னேற விரும்புகிறோம். தலிபான் கைதிகளின் விடுதலை துரிதப்படுத்தப்படும். தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் நான் அறிவிக்கிறேன்’ என கூறினார்.
இதேபோன்ற போர்நிறுத்தம் கடந்த 2018ஆம் ஆண்டில் இதே ரமலான் பெருநாளில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த பெப்ரவரி மாதம் கையெழுத்திடப்பட்ட அமெரிக்க-தலிபான் அமைதி ஒப்பந்தத்தின் கீழ் கைதி பரிமாற்றம் ஒப்புக் கொள்ளப்பட்டது.
ஆனால் அமைதி பேச்சுவார்த்தைகளின் போது இது ஒரு குறிப்பிடத்தக்க தடையாக மாறியுள்ளது. இது போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஒரு படியாக இருக்க வேண்டும் என்று கருதப்பட்டது.
ஆனால், ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் விடுதலையை தாமதப்படுத்த முயற்சிப்பதாக தலிபான்கள் கூறுகின்றனர். அதே நேரத்தில் போராளிகளின் கோரிக்கைகள் நியாயமற்றவை என்று அதிகாரிகள் புகார் கூறியுள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo